அர்ஜுன உவாச1 |
ஸந்யாஸஸ்ய மஹாபா3ஹோ த1த்1த்1வமிச்1சா2மி வேதி3து1ம் |
த்1யாக3ஸ்ய ச1 ஹ்ருஷீகே1ஶ ப்1ருத2க்1கே1ஶினிஷூத3ந|| 1 ||
அர்ஜுனஹ உவாச--—அர்ஜுன் கூறினார்; ஸந்யாஸஸ்ய—--செயல்களைத் துறப்பது; மஹா-பாஹோ---வலிமையான கைகளை உடையவர்; தத்வம்--—உண்மையை; இச்சாமி—--நான் விரும்புகிறேன்; வேதிதும்--—புரிந்து கொள்ள; தியாகஸ்ய--—செயல்களின் பலனை அனுபவிப்பதற்கான ஆசைகளைத் துறப்பது; ச--—மற்றும்;ஹ்ரிஷிகேஶ—--கிருஷ்ணன், புலன்களின் ஏகாதிபதி; ப்ரிதக்--—வேறுபாட்டை; கேஶி-நிஷூதந—--கிருஷ்ணன், கேஶி என்ற அரக்கனைக் கொன்றவர்.
BG 18.1: அர்ஜுன் கூறினார்: ஓ வலிமைமிக்க கிருஷ்ணா, ஸன்யாஸம் (செயல்களைத் துறப்பது) மற்றும் தியாகம் (செயல்களின் பலன்களுக்கான ஆசையைத் துறப்பது) ஆகியவற்றின் தன்மையைப் புரிந்து கொள்ள விரும்புகிறேன். ஓ ஹ்ருஷிகேஶா, இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாட்டையும் அறிய விரும்புகிறேன், ஓ கேஶினிஷூதன!
அர்ஜுன உவாச1 |
ஸந்யாஸஸ்ய மஹாபா3ஹோ த1த்1த்1வமிச்1சா2மி வேதி3து1ம் |
த்1யாக3ஸ்ய ச1 ஹ்ருஷீகே1ஶ ப்1ருத2க்1கே1ஶினிஷூத3ந|| 1 ||
அர்ஜுன் கூறினார்: ஓ வலிமைமிக்க கிருஷ்ணா, ஸன்யாஸம் (செயல்களைத் துறப்பது) மற்றும் தியாகம் (செயல்களின் பலன்களுக்கான ஆசையைத் துறப்பது) ஆகியவற்றின் தன்மையைப் புரிந்து கொள்ள விரும்புகிறேன். ஓ …
Sign in to save your favorite verses.
Sign In
Navigate directly to the wisdom you seek
Start your day with the timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!
அர்ஜுனன் ஸ்ரீ கிருஷ்ணரை ‘கேஶினிஷூதன்‘ என்று அழைக்கிறார், அதாவது ‘கேஶி என்ற அரக்கனைக் கொன்றவர்’. பூமியில் தனது தெய்வீக பொழுது போக்குகளில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கேஶி என்ற கோபமும் வன்முறையும் கொண்ட அரக்கனை அவன் ஒரு பித்துப்பிடித்த குதிரையின் வடிவத்தை எடுத்து ப்ரஜ் தேசத்தில் அழிவை ஏற்படுத்தியபோது கொன்றார். சந்தேகம் என்பதும் அடக்கப்படாத குதிரையைப் போன்றது. அர்ஜுனன், ‘கேசி அரக்கனைக் கொன்றது போல், என் மனதின் சந்தேகம் என்ற அரக்கனைக் கொன்றுவிடு’ என்று வேண்டுகிறார். அவரது கேள்வி ஊடுருவுதாகவும் மற்றும் அழுத்தமாகவும் உள்ளது. அவர் துறவறத்தின் அதாவது 'செயல்களைத் துறத்தலின்' தன்மையை அறிய விரும்புகிறார். அவர் தியாகத்தின் தன்மையையும்.’ அறிய விரும்புகிறார், அதாவது 'செயல்களின் பலனை அனுபவிப்பதற்காக ஆசைகளைத் துறத்தல்,’ மேலும், வேறுபாடு என்று பொருள்படும் ப்1ரித2க் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்; இரண்டு சொற்களுக்கு இடையிலான வேறுபாட்டை அவர் புரிந்து கொள்ள விரும்புகிறார். அர்ஜுனன் ஸ்ரீ கிருஷ்ணரை ஹ்ருஷிகேஶா என்றும் குறிப்பிடுகிறார், அதாவது, 'புலன்களின் ஏகாதிபதி'. மனதையும் புலன்களையும் அடக்கி ஆட்கொள்ளும் எல்லாவற்றிலும் மேலான வெற்றியை அடைவதே அர்ஜுனனின் குறிக்கோள். இந்த வெற்றியே பரிபூரண அமைதியைத் தரக்கூடியது. மேலும் புலன்களின் ஏகாதிபதியான ஒப்புயர்வற்ற பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே இந்த பூரண நிலையாக திகழ்கிறார்.
இந்த தலைப்பு முந்தைய அத்தியாயங்களிலும் விளக்கப்பட்டது. ஸ்ரீகிருஷ்ணர் 5.13 மற்றும் 9.28 வசனங்களில் ஸன்யாஸத்தைப் பற்றியும், 4.20 மற்றும் 12.11 வசனங்களில் தியாகத்தைப் பற்றியும் பேசியிருந்தார். ஆனால் இங்கே அவர் அதை மற்றொரு கோணத்தில் விளக்குகிறார். அதே உண்மை பல்வேறு கண்ணோட்டங்களில் இருந்து தன்னை முன்வைக்க அனுமதிக்கிறது, மேலும் ஒவ்வொரு கண்ணோட்டமும் அதன் தனித்துவமான முறையீட்டை வழங்குகிறது. எடுத்துக்காட்டாக, தோட்டத்தின் பல்வேறு பகுதிகள் பார்வையாளரின் மனதில் வித்தியாசமான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன, அதே நேரத்தில் முழு தோட்டமும் மற்றொரு தோற்றத்தை உருவாக்குகிறது.
இது போலவே பகவத் கீதை பல்வேறு கண்ணோட்டங்களை நமக்கு அளிக்கிறது. ஒவ்வொரு அத்தியாயமும் தனித்தனி யோகமாக நியமிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் பதினெட்டாவது அத்தியாயம் சுருக்கமாக கருதப்படுகிறது. இந்த அத்தியாயத்தில், ஸ்ரீ கிருஷ்ணர் முந்தைய பதினேழு அத்தியாயங்களில் வழங்கப்பட்ட வற்றாத நித்திய கோட்பாடுகள் மற்றும் நித்திய உண்மைகளை சுருக்கமாகக் கூறுகிறார். மற்றும், அவை அனைத்தின் கூட்டு முடிவை நிறுவுகிறார். துறவு மற்றும் பற்றின்மை பற்றிய தலைப்புகளைப் பற்றி விவாதித்த பிறகு, மூன்று குணங்களின் இயல்புகள் மற்றும் அவை எவ்வாறு மக்களின் வேலை செய்வதற்கான இயல்பான சார்புகளை பாதிக்கின்றன என்பதை விளக்குகிறார். நற்செயல் முறை மட்டுமே நய மேம்பாட்டிற்கு தகுதியானது என்பதை அவர் மீண்டும் வலியுறுத்துகிறார். பின்னர் அவர் பக்தி அல்லது ஒப்புயர்வற்ற பகவானிடம் பிரத்தியேகமான அன்பான பக்தி முதன்மையான கடமை என்றும், அதை அடைவதே மனித வாழ்க்கையின் குறிக்கோள் என்றும் முடிவு செய்கிறார்.